×

கொள்ளிடம் அருகே வாய்க்காலை இளைஞர்கள் தூர்வாரினர்

கொள்ளிடம், டிச.5: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுரில் சமாது வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மாதிரவேளுரில் 50 ஏக்கருக்கு பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் கடந்த ஒரு வருடங்களாக தூர்வாராமல் வயல்களில் தேங்கி தண்ணீர் வடியாமல் தேங்கியே இருந்தது.இந்த வாய்க்காலை தூர்வார பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தூரவாரவில்லை. இதனால் வாய்க்காலில் புதர்மண்டி தண்ணீர் வடியமுடியாமல் தேங்கியே கிடந்தது.
இந்நிலையில் மாதிரவேளூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ராம்குமார், அருண் உள்ளிட்ட இளைஞர்கள் தாமாகவே முன்வந்து சமாது வாய்க்காலை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர் வாரி ஆழப்படுத்தினர்.

Tags : hut ,
× RELATED இருளர் குழந்தைகளுக்காக ஒற்றை குடிசைக்குள் இயங்கும் ‘அலை!’