×

இனாம்கரூர் பெரிய குளத்துப்பாளையத்தில் வடிகாலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து பாதிப்பு

கரூர், டிச. 5: வடிகாலில் பிளாஸ்டிக்கழிவுகள் கலப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.கரூர் இனாம்கரூர் பகுதியில் பெரியகுளத்துப்பாளையம் உள்ளது. இங்கு கழிவுநீர் செல்வதற்காக வடிகால் அமைக்கப்பட்டது. மழைக்காலத்தில் மழைநீர் கலந்து வடிகாலில் நிரம்பி விடுகிறது. கழிவுநீர் செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன.

குப்பைகளை வடிகாலில் கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலாப் அமைக்க வேண்டும். அல்லது குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் காரணமாக வடிகால் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரகேடு ஏற்படுகிறது.கொசுக்கள் உற்பத்தியாவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது