கடையம், டிச. 5: கடையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் அருணாசலத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடையம் சார்பதிவாளர் அலுவலகம் ராமநதி சாலையில் அமைந்துள்ளது. தற்போது கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 24 வருவாய் கிராமங்களுக்கு பத்திரப்பதிவு நடந்து வருகிறது. இது தவிர திருமணபதிவு, சங்கங்கள் பதிவு ஆகியனவும் நடைபெறுகிறது. . இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆழ்வார்குறிச்சி குறுவட்டத்திற்குட்பட்ட மேலாம்பூர் பகுதி-1, மேலாம்பூர்-2, அடைச்சாணி, பள்ளக்கால் பொதுக்குடி, பனஞ்சாடி, ரெங்கச்சமுத்திரம், இடைகால் பகுதி-1, இடைகால் பகுதி-2 மற்றும் வெங்கடாம்பட்டி குறுவட்டத்திற்க்குட்பட்ட ராவுத்தப்பேரி ஆகிய பத்து கிராம சொத்துக்கள் அம்பாசமுத்திரம், முக்கூடல், வி.கேபுரம் ஆகிய சார்பதிவகங்களில் பத்திர பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.