சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களான செங்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 42க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு எழும்பூர் ரயில் நிலைய நடைமேடை 5, 6ல் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் 10.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த ரயிலில் 30க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக ரயில்ேவ போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.