தண்டையார்பேட்டை: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில், மத்திய, மாநில அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை நடந்தது. தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார். அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் சுதா, முன்னாள் எம்எல்ஏ யசோதா முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ‘‘இந்தியா முழுவதும் பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்து மூடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.