சென்னை: சென்னை, கொளத்தூரை சேர்ந்தவர் எஸ்.குருபிரசாத். இவர் கடந்த 2013 செப்டம்பர் அன்று கோயம்பேடு அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பைக்குடன் சறுக்கி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த மாநகர அரசு பேருந்து அவரது கை மீது ஏறி, இறங்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் சிக்கிசைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி, மாநகர போக்குவரத்து கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.