கோவில்பட்டி, டிச. 5: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் துவங்கியது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் காளிதாச முருகவேல் தலைமை வகித்தார். மனிதவள உதவிப் பேராசிரியர் சக்தி வரவேற்றார். இடிசெல் ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சிகள் குறித்துப் பேசினார்.