தூத்துக்குடி, டிச. 5: தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் ஜீவன் (45). திருநங்கையான இவர், தனது தாய் மற்றும் நண்பர்களான ஜான்சி (36), ஜானியா (30) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு தூத்துக்குடி கோக்கூரை சேர்ந்த பூச்சந்திரன் மகனும் கூலித் தொழிலாளியுமான முருகதாஸ் (35) என்பவர் குடிபோதையில் வந்து ஜீவனின் வீட்டுக் கதவை தட்டியதோடு தரக்குறைவாகப் பேசினாராம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.