×

தர்மபுரியில் அறுவடைக்கு தயாரான மஞ்சள்

தர்மபுரி, டிச.4: தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்களே முக்கிய விவசாய பயிராக பயிரிடப்படுகிறது. தர்மபுரி ஒன்றியத்தில் வத்தல்மலை, அன்னசாகரம், மிட்டாரெட்டிஅள்ளி, தின்னஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, சோலைக்கொட்டாய், லாலாகொட்டாய், வெள்ளோலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். மஞ்சள் பயிர் பருவமழையை நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மஞ்சள் அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக உள்ளது. இதுகுறித்து தர்மபுரி ஒன்றியத்தில் அன்னசாகரம் பகுதியில் விவசாயிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை தர்மபுரி ஒன்றியத்தில் பரவலாக பெய்துள்ளது. இதையொட்டி ஆடிப்பட்டத்தில் மஞ்சள் பயிரிட்டோம். இதே போல் வடகிழக்கு பருவமழையும் பரவலாக பெய்து வருகிறது. தற்போது மஞ்சள் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. பருவமழையால் நடப்பாண்டில் மஞ்சள் மகசூல் அதிகரிக்கும் என்றனர்.

Tags : Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...