×

தந்தையை பாட்டிலால் குத்திய மகன் கைது

திருவேங்கடம், டிச. 4: திருவேங்கடம் அருகேயுள்ள செவல்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வனராஜ்(50), விவசாயி. இவரது மகன் ராஜதுரை(27). திருமணமாகி 2 ஆண்டு ஆகிறது. ராஜதுரை, கோவையில் மில்லில் ேவலை பார்த்து வந்தார். இதனால் அவரது மனைவி கள்ளிகுளத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.இந்நிலையில் ராஜதுரை. கடந்த 2 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று தந்தையை பார்க்க போதையில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வனராஜ், மகனிடம் குடும்ப செலவுக்கு பணம் அனுப்பாதது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை, அங்கிருந்த பாட்டிலை எடுத்து உடைத்து தந்தையின் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் குருவிகுளம் எஸ்ஐ செல்வராஜ் வழக்கு பதிந்து ராஜதுரையை கைது செய்தார்.


Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி