×

மரக்கன்றுகள் நடும் விழா

பேராவூரணி, டிச. 4: பேராவூரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.கோகனட் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் நீலகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். பத்திர பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் அருள்ஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அலுவலக வளாகத்தில் நிழல்தரும் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அலுவலக வளாகத்தில் மண்டி கிடந்த புதர்கள் அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது.

Tags : Tree Planting Ceremony ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...