×

தோகைமலை காவல்காரன்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் உற்சவம்

தோகைமலை, டிச. 4: தோகைமலை அருகே காவல்காரன்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் 12ம் ஆண்டாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காவல்காரன்பட்டி சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கும் அதிகமான ஐய்யப்ப பக்தர்கள் கடந்த 15 நாட்களாக சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருந்து பஜனைகள் செய்து வழிபட்டு வந்தனர். விரதத்தின் இறுதி நாளான நேற்று சபரிமலைக்கு செல்வதற்கு முன் காவல்காரன்பட்டியில் உள்ள மொட்டபுளி கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் விநாயகர், பாம்பாலம்மன், காளியம்மன், முருகன் கோயில்கள் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஐயப்ப பக்தர்கள் பக்திபரவசத்துடன் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமியை ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : landing festival ,devotees ,Iowappa ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...