×

கரூர் ராயனூரில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு

கரூர், டிச. 4: கரூர் ராயனூர் இலங்கை தமிழர் குடியிருப்பு அருகில் குப்பைகள் மலைபோல குவிந்து கிடப்பதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது.கரூர் ராயனூரில் இலங்கை தமிழர் குடியிருப்பு உள்ளது. இதன் அருகே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் சாலையோரம் குப்பைகள் குவிந்து கொண்டுள்ளது. மழைநீரில் குப்பைகள் மக்கி தொற்று நோய் கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதுமான அளவில் குப்பை தொட்டிகளை வைத்து உடனுக்குடன் குப்பையை அகற்ற வேண்டும். நகராட்சியில் குப்பைகளை அகற்றுவதற்காக வீடுதோறும் வரிவிதிப்பு செய்யப்படுகிறது. இருந்தும் குப்பைகளை அகற்றுவதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Tags : Karur Raineur ,mountain ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்!