×

உச்சிப்புளியில் சாய்ந்த ஆலமரம்

மண்டபம், டிச.4: உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாசல் முன் 50 ஆண்டுகளை கடந்த ஆலமரம் கன மழையால் வேருடன் சாய்ந்தது. மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயல்வெளிகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வாசல் முன் இருந்த 50 ஆண்டுகளை கடந்த ஆலமரம் மழையால் வலுவிழந்து வேருடன் நேற்று முன்தினம் இரவு சாய்ந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. தீயணைப்பு வீரர்கள், மண்டபம் ஊராட்சி ஒன்றியம்,மனங்கொண்டான் ஊராட்சி பணியாளர்கள் மரத்தை அகற்றினர்.

Tags : summit ,
× RELATED தேசிய அளவிலான ஆக்சுவேரியல்...