×

காசர்கோட்டில் மனைவி அடித்து கொலை கணவர் போலீசில் சரண்

பாலக்காடு, டிச.4:  கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் காஞ்ஞிரமடுகத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (52). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு கல்யாணி (48) என்ற மனைவியும், சரண்யா (25) என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி கல்யாணி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைப்பார்த்து நேற்று மாலை வீட்டிறகு வந்த நேரத்தில் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் மனைவி கல்யாணியை அருகில் கிடந்த விறகுக்கட்டை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். தடுக்க சென்ற மகளையும் தாக்கியுள்ளார். இருவரும் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். அக்கம்பக்கத்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து பார்க்கையில் கல்யாணி இறந்து கிடந்தார். காயத்துடன் கிடந்த மகளை உடனடியாக மீட்டு மங்களூரூ நகராட்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கோபாலகிருஷ்ணன் காசர்க்கோடு போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

Tags : Kasargod ,death ,
× RELATED கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில்...