கோவை, டிச.4: கோவை மில் அதிபர் மகளை வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம், மில் அதிபர். இவருடைய மகள் சுகன்யா(28), எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கும், மதுரை தபால்தந்தி நகரை சேர்ந்த சுந்தரகிருஷ்ணன் மகன் ராஜகுரு (31) என்பவருக்கும் கடந்த 26.7.2017ல் திருமணம் நடந்தது. இந்நிலையில் சுகன்யா, கோவை ராமநாதபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், எனது கணவர் ராஜகுரு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு பஸ்களுக்கான உபகரணங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். திருமணத்தின்போது 300 பவுன் நகை, ரூ.20 லட்சம், 12 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியவற்றை எனது பெற்றோர் வரதட்சணையாக வழங்கினர்.