×

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

பெருந்துறை, டிச. 4:   பெருந்துறை ரோட்டரி சங்கம் மற்றும் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பெருந்துறை மெடிக்கல் காலேஜ் மாணவர்கள் இணைந்து உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணி மெடிக்கல் கல்லூரியில் இருந்து பெருந்துறை அரசு சுகாதார மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.தோப்பு வெங்கடாசலம் மற்றும் பெருந்துறை மெடிக்கல் கல்லூரி தலைவர் டாக்டர் ராஜேந்திரன், சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர்கள் அனைவரும் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். சுமார் 4 கி.மீ. வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியில் சென்றனர். செட்டிநாடு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில்

Tags : AIDS awareness rally ,
× RELATED விவசாயிகள் எதிர்பார்ப்பு காரைக்காலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்