×

கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் செம்மண் சகதி அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

கந்தர்வகோட்டை, டிச.4: கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் செம்மண் சகதி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டர்.

இந்நிலையில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் கந்தர்வகோட்டை ஊராட்சியின் தனி அலுவலர் குமரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் ஆகியோரின் முயற்சியால் நேற்று காலை முதலே பேருந்து நிலையத்தில் தேங்கியிருந்த சேறு மற்றும் சகதிகளை ஆட்கள் கொண்டு இரண்டு பொக்லைன் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது. மேலும் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...