×

சமூக ஆர்வலர்கள் வரவேற்பு திமுக, காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலை கண்டு பயப்படவில்லை

புதுக்கோட்டை, டிச. 4:  திமுக, காங்கி கட்சி உள்ளாட்சி தேர்தலை கண்டு பயப்படவில்லை. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி நெறி முறைப்படி நடத்த வேண்டும் என்று புதுக்கோட்டையில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு கூறினார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த கொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கேவி.தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் உள்ளாட்சி அமைப்புகள் வழிகாட்டுதலையும் முறையாக தேர்தல் நடக்க வேண்டும் என்பதுதான் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு. எப்போது தேர்தல் வந்தாலும் அவர்களை சந்திப்பதற்கு திமுக காங்கிரஸ் தயங்கியது கிடையாது அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : activists ,party ,DMK ,Congress ,elections ,
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...