வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளிடம் செல்போன் திருடியவர் கைது

நாகை, டிச. 4:  வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளிடம் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.நாகை முதலாவது கடற்கரை சாலையில் தனியார் ஐஸ் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 1ம் தேதி இரவு பணி முடிந்ததும் பணியாளர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது 5 நபர்களுடைய செல்போன்களையும் காணவில்லை. இதுகுறித்து நாகை டவுன் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்தநிலையில் வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளிடம் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தனியார் நிறுவனத்தில் செல்போன்களை திருடியது தெரியவந்தது. மேலும் அவர் புதிய கல்லார் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (22) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 35 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: