×

குளத்தில் தவறி விழுந்தவர் சாவு

புவனகிரி, டிச. 4:  சிதம்பரம் ஓமக்குளம் எடத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(40). சம்பவத்தன்று இரவு இவர் வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதையடுத்து குடும்பத்தினர் அவரை தேடியபோது அருகிலுள்ள ஓமக்குளத்தில் இறந்த நிலையில் கிடந்தார். இதுபற்றி சிதம்பரம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து குளத்துக்குள் இறங்கி உயிரிழந்த நிலையில் பழனிவேலை மீட்டனர். குளத்தில் கை, கால்களை கழுவுவதற்காக சென்றபோது தவறி விழுந்து பழனிவேல் இறந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அவரது உறவினர் சித்ரா சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : pool ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்