×

தனித்தனி சம்பவம் பஸ் டிரைவர், நர்சிங் மாணவி தற்கொலை

பண்ருட்டி, டிச. 4: பண்ருட்டி அருகே பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன் கோதண்டராமன்(23), தனியார் பஸ் டிரைவர். இவருக்கு கடந்த 4 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும் பலன் ஏற்படவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். தகவலின்பேரில் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் வீரப்பன் அளித்த புகாரின் ேபரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவம்:  விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் மகள் பல்லவி (23). இவர் மதுராந்தகம் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரது பாட்டி வீடான பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் கிராமத்தில் தங்கியிருந்து மதுராந்தகத்திற்கு சென்று வருகிறார்.

திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து நாகப்பன் அளித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : incident ,Bus driver ,suicide ,nursing student ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை