×

சாலையில் பழுதாகி நின்ற பேருந்து: போக்குவரத்து பாதிப்பு

விருத்தாசலம், டிச. 4: விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்கரை, கடலூர் ரோடு வழியாக கடலூருக்கு தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து நிர்வாகத்தினர் உள்ளே இருந்த பயணிகளை இறக்கி மாற்று பேருந்தில் அனுப்பினர்.பழுதான பேருந்து சாலையின் குறுக்கே சாலை முழுவதையும் ஆக்கிரமித்து நின்றது. நேற்று முன்தினம் இரவு பழுதாகி நின்ற பேருந்து நேற்று காலை 12 மணி ஆகியும் பேருந்து அப்புறப்படுத்தாமல் நடுரோட்டிலேயே நின்றது.

இதனால் விருத்தாசலத்தில் இருந்து கடலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் பல்வேறு சிரமங்களுக்கிடையே அந்த சாலையை கடந்து சென்றன. இதனால் நேற்று காலை பள்ளி கல்லூரி மற்றும் பல்வேறு பணிகளுக்கு பயணிகளை கொண்டு செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் பேருந்தை கிரேன் மூலம் வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து  போக்கு வரத்தை சரி செய்தனர்.




Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...