×

கார் மோதி முதியவர் பலி

தா.பழூர், டிச. 3: தா.பழுர் அருகே கார் மோதி முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூரை சேர்ந்தவர் ரங்கராஜன் (93). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்றார். மதனத்தூர் பாலம் நோக்கி மெயின் ரோட்டில் சென்றபோது எதிர்திசையில் வந்த கார், ரங்கராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரங்கராஜனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கும்பகோணம் மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். பின்னர மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் பெருமாள் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த பரணிதரன் (23) மீது தா.பழூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். படிப்படியாக 3மாடி ஏறிப்பணிபுரிந்தவர் படிப்படியாக பதவி உயர்வால் தற்போது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திலேயே உதவி வரவேற்பாளர் பணியிடத்தை பெற்றுள்ளார்.அங்கு தினமும் வருகிற நூற்றுக் கணக்கானோரு க்கு தனது துறை அலுவலகத்தில் யாரைப் பார்க்க எந்ததிசையில் சென்றுஅலுவலரை சந்திக்க வேண்டும், என தெள்ளத் தெளிவாக விளக்கி வருகிறார்.

Tags : car collision ,
× RELATED ஆத்தூர் அருகே கார்கள் நேருக்கு நேர்...