துறையூர், நவ.22: துறையூர் அருகே புலிவலம் சரகத்தை சேர்ந்த சந்தனபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணியன், கூலித்தொழிலாளி. இவரது மகள் நிவேதா(21). இவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதே தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த பிரவீன்ராஜ் (25) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.இந்நிலையில் இருவரும் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்பு திருப்பூரில் வசித்து வந்த நிலையில் நிவேதா தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார்.