×

போலீசார் அதிரடி மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

தா.பழூர், நவ. 22: தா.பழூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த தொழிலாளி கொளஞ்சிநாதன் (52) இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் இவர் மதுபோதையில் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்செடிக்கு அடிக்க வைத்திருந்த குருணை மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து தா.பழூர் போலீசில் கொளஞ்சிநாதன் மகன் சந்தானகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை