×

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அரிசி கார்டாக மாற்றி கொள்ளலாம்

பெரம்பலூர், நவ.22: பெரம்ப லூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டை தாரர்கள் அரிசி பெறக்கூ டிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ள லாம் என கலெக்டர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப் பில் தெரிவித்திருப்பதாவது :பொதுவிநியோகத்திட்டத்தின்கீழ் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறக்கூடிய குடும்ப அட் டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்றக் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் கடந்த 19ம்தேதி சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என உத்திர விட்டுள்ளார்.

இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுவிநி யோகத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டை களாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, வரும் 26ம்தேதிக்குள் www.tnpds. gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் நேரடியாக அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்க ளிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : family cardholders ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் 1.85 லட்சம் குடும்ப...