×

முத்துப்பேட்டை பகுதிகளில் வீடுவீடாக நிலவேம்பு கசாயம் விநியோகம்

முத்துப்பேட்டை, நவ.22: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு டெங்கு நோய் பரவாமல் இருப்பதற்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அமீன் தலைமை வகித்தார். கிளை தலைவர் ஹாஜா முகைதீன், மாவட்ட பேச்சாளர் யூசுப்கான், கிளை மாணவரனி செயலாளர் முஸம்மில், கிளை தொண்டரனி செயலாளர் சிராஜுதீன் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி துவக்கி வைத்தனர். இதில் 350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் குடித்து பயன்பெற்றனர். அதனை தொடர்ந்து நாச்சிகுளம் அருகே உள்ள பள்ளியமேடு, கோபாலசமுத்திரம் கிராம பகுதியில் வாகனத்தில் எடுத்து சென்று வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்