×

829 பயனாளிகளுக்கு ரூ.17.40 லட்சம் நலஉதவி

வலங்கைமான், நவ.22: வலங்கைமானில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமையில் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டிஆர்ஓ பொன்னம்மாள், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, ஆர்டிஓ ஜெயபிரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் முதியோர் உதவித்தொகை 480 பேருக்கு, வீட்டுமனை பட்டா 75பேருக்கு, குடும்ப அட்டை 40 பேருக்கு என 829 பயனாளிகளுக்கு ரூ.17.40 லட்சம் நலஉதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் தாசில்தார் இஞ்ஞாசிராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சங்கர், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்