×

தொடர் மழையால் விவசாய பணிகள் விறுவிறுப்பு

கந்தர்வகோட்டை, நவ.22: கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மழை தற்போது விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்றும் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கந்தர்வகோட்டை அருகே உள்ள வயல்களில் தற்போது வளர்ந்துள்ள நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்துகளை தெளிக்கும் பணியிலும், சத்து உரங்களை போடுவதும், நிலத்தை உழுது போடுவது என பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட வருடங்களுக்கு பிறகு கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் ஆர்வத்துடன் பணிகள் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...