×

அமைச்சர் தகவல் கீழ்வேளூர் ஒன்றியத்தில்

கீழ்வேளூர், நவ.22: கீழ்வேளூர் ஒன்றியத்தில் அதிமுக கட்சியிலிருந்து விலகி 46 பேர் திமுகவில் இணைந்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். தேவூர் ஊராட்சி கழக செயலாளர் கண்ணன் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த தேவூர் ஊராட்சி முன்னாள் அவைத் தலைவர் ரெத்தினவேல் தலைமையில் அக் கட்சியை சேர்ந்த பொன்னுசாமி, வேணு, செந்தில், சக்திவேல், அருள்தாஸ், ராஜிவ்காந்தி, செந்தில்குமார், முருகேசன், கதிரவன், மகேஷ்குமார் சுரேஷ் உள்ளிட்ட 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் அக் கட்சியில் இருந்து விலகி நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு இரு வண்ண கைத்தறி ஆடை அணிவித்து கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினர் மதியழகன், ஒன்றிய நிர்வாகிகள் பஞ்சுநாகராஜன், நடராஜன், வீரமணி, சிவகுமார், காசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Keezhveloor Union ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...