தரங்கம்பாடி, நவ.22: செம்பனார்கோவிலில் அனைத்துத்துறை ஓய்வூதியம் பெறுவோர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் கவிஞர் ராஜராமன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வான்மீகலிங்கம் வரவேற்று பேசினார். பணி ஓய்வுபெறும் நாளன்று பணி நீக்கம் செய்யும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.