×

திருப்பத்தூர் அருகே ஆட்டோ தீ வைத்து எரிப்பு

திருப்பத்தூர், நவ.22: திருப்பத்தூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவிற்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.  திருப்பத்தூர் அடுத்த சின்ன கோனாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார்(30). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.நள்ளிரவு 1 மணியளவில் நந்தக்குமாரின் ஆட்டோ தீப்பற்றி எரிவதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு வெளியே வந்த நந்தகுமார் தனது ஆட்டோ எரிவதை பார்த்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதுகுறித்து புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : flames ,Tirupattur ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...