×

வேலூரில் இன்று நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ரத்து

வேலூர், நவ.22: வேலூரில் இன்று நடக்க இருந்த விவசாயிகளின் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வேலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளின் குறைதீர்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை(இன்று) கலெக்டர் தலைமையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிர்வாக காரணத்தால் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : grievances meeting ,Vellore ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...