×

ஒடுகத்தூர் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது

அணைக்கட்டு, நவ. 22: ஒடுகத்தூர் அடுத்த பலாம்பட்டு நெக்கினி மலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர்(44). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கஞ்சா செடிகளை நட்டு வளர்த்து வருவதாக வேலூர் திட்டமிட்டு குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு வடக்கு மண்டல போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், வேப்பங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று காலை ஜெயசங்கர் விவசாய நிலத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, விவசாய நிலத்தில் உள்ள மறைவான பகுதியல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெயசங்கரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கஞ்சா செடி வளர்த்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து, போலீசார் ஜெயசங்கரை வேப்பங்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில், வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து ஜெயசங்கரை கைது செய்தனர். மேலும், அவரிடம் கஞ்சா செடி, யார்மூலம் கிடைத்தது என்பன குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Odukathoor ,
× RELATED அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூரில்...