மகாதேவ அஷ்டமி வழிபாடு

சாத்தான்குளம், நவ. 22: கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோயிலில் மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சாத்தான்குளம் அருகே  கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர்  சிவகாமி அம்பாள் கோயிலில் கார்த்திகை மாத மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டிசுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு  சிறப்பு அபிஷேகம்,  அலங்கார தீபாராதனை நடந்தது.  பாண்டீஸ்வரருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து  காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.  சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதுதல்  நடந்தது.  சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: