×

நெல்லை அருகே விஷம் குடித்த விவசாயி சாவு

நெல்லை, நவ. 22:  நெல்லை அருகே விஷம் குடித்த விவசாயி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். நெல்லை அடுத்த புளியம்பட்டி  அருகேயுள்ள அக்கநாயக்கன்பட்டி லட்சுமிபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர்  ஆறுமுகம் (52) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக விரக்தியடைந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : paddy ,
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...