ஆனந்தபுரம் ரஞ்சிஆரோன் ஐடிஐயில் பட்டமளிப்பு விழா

நாசரேத், நவ.22: நாசரேத் அருகேயுள்ளஆனந்தபுரம் ரஞ்சிஆரோன் ஐடிஐயில் பயிற்சியாளர்களின் 26வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. ஐடிஐ தாளாளர் பத்மினிஆரோன் தலைமை வகித்தார். முதல்வர் சுதாகர் வரவேற்றார். நியூசிலாந்தை சேர்ந்த ராபின் பார்க்கின்சன், வியட்நாமை சார்ந்த கிம்காங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பயிற்சியாளர்களுக்கு பட்டங்களை வழங்கினர். துணைமுதல்வர் ஈவ்லின் பிரான்சிஸ் வினாடி- வினா போட்டிகளை நடத்தினார்.

 பிட்டர், எலக்டீரிசியன், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக் ஆகிய தொழிற்பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொழிற்பள்ளி முதல்வர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Related Stories: