கோவில்பட்டி பெண் மாயம்

நெல்லை, நவ. 22:  பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கணவருக்கு உதவியாக இருந்த பெண், கடைக்கு ெசன்றபோது மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 கோவில்பட்டி அருகேயுள்ள முக்கூட்டுமலை மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஊமைத்துரை. இவர் கடந்த 9ம் தேதி ஊரில் நடந்துசென்றபோது வேன் மோதியதில் காயமடைந்தார். இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், பின்னர்  மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து அங்கு அவருக்கு துணையாக அவரது மனைவி மாரியம்மாளும், அவரது தம்பி தங்கவேலும் இருந்து வந்தனர். இதனிடையே கடந்த 11ம் தேதி காலை 9 மணிக்கு கடைக்குச் செல்வதாகக் கூறி வெளியே சென்ற மாரியம்மாள், மீண்டும் வார்டுக்கு வரவே இல்லை. இதனால் பதறிய குடும்பத்தினர், பல இடங்களில் தேடிப்பார்த்தும், விசாரித்தும் அவரைப்பற்றிய எந்தவித தகவலும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தங்கவேல் நெல்லை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், மாயமான மாரியம்மாளைத் தேடி வருகின்றனர்.

Related Stories: