தூத்துக்குடி, நவ.22: தூத்துக்குடி ஹோட்டல் டி.எஸ்.எப். கிராண்ட் பிளாசாவில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகம் முழுவதும் டிச.25ம்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது. இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி ஹோட்டல் டி.எஸ்.எப். கிராண்ட் பிளாசாவில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது. இந்த கேக் மிக்ஸிங் விழாவில் டிஎஸ்எப் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி.துரைராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணராஜபுரம் சேகர குருவானவர் ஜேஸ்பர் அற்புதராஜ் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் மற்றும் ஜிம்கானா கிளப் தலைவருமான ஜோபிரகாஷ், ஜிம்கானா கிளப் செயலாளர் அருள்ராஜ் சாலமன், டி.எஸ்.எப். செயல் இயக்குநர்கள் டி.கிப்சன், திவ்யா, பொதுமேலாளர் சுப்பிரமணியன், மற்றும் மேலாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.