பொத்தகாலன்விளையில் மனுநீதிநாள் முகாம்

சாத்தான்குளம்,  நவ.22:சாத்தான்குளம் தாலுகா சாஸ்தாவிநல்லூர் கிராமத்துக்குட்பட்ட  பொத்தக்காலன்விளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  மனுநீதி நாள் முகாம்  நடந்தது. முகாமுக்கு சாத்தான்குளம்  தாசில்தார் ராஜலட்சுமி தலைமை வகித்தார் சமூகபாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் செந்தூர்ராஜன் வரவேற்றார். முன்னதாக முன்னோடியாக பெறப்பட்ட 139 மனுக்களில் 90 மனுக்கள் ஏற்புடையதாக கொண்டு துறைசார்ந்த அதிகாரிகள் பதில் அளித்தனர். முகாமில் திருச்செந்தூர்  ஆர்டிஓ தனப்பிரியா பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை,கல்வி உதவித்தொகை, இலவச பட்டா என 65பேருக்கு ரூ. 8லட்சத்து 94 ஆயிரத்து 920 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.

இதில் சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி உள்ளிட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை  அலுவலர்கள்,  பங்கேற்றனர். மண்டல துணை  தாசில்தார் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Related Stories: