ஒர்க்ஷாப் உரிமையாளர் பைக் வீட்டு வாசலில் எரிப்பு

தூத்துக்குடி, நவ. 22: தூத்துக்குடி ஐயப்பன் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் கணபதி மகன் கந்தன் (36). வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசல் முன் வழக்கம்போல் பைக்கை நிறுத்தியிருந்தார். திடீரென நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது அவரது பைக் எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்க போராடியும், அணைக்க முடியவில்லை. இதனால் பைக் எரிந்து எலும்புக்கூடானது. இதுகுறித்து சிப்காட் போலீசில் கந்தன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து பைக் எரிக்கப்பட்டது சதி செயலா அல்லது விபத்தா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: