விவசாயி உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல்

வைகுண்டம், நவ.22:  வைகுண்டம் அருகே விவசாயி உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வைகுண்டம்  அருகேயுள்ள ஆதிச்சநல்லூரை சேர்ந்த முத்தையா மகன் மாடசாமி (40). விவசாயியான இவரது அண்ணன் சுப்பிரமணியனுக்கும் அப்பகுதியை சேர்ந்த  சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில்,  சம்பவத்தன்று மாடசாமி, தனது அண்ணன் மகளுடன் ஊரில் நடந்து சென்றபோது  அங்குவந்த பலவேசம் என்பவரது மகன்கள் கிருஷ்ணன், சொக்கலிங்கம் மற்றும் அதே  ஊரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் வடிவேல் ஆகிய மூவரும் சேர்ந்து மாடசாமி  மற்றும் அவரது அண்ணன் மகளை திடீரென்று தாக்கினர். இதில், படுகாயம்  அடைந்த இருவரும் வைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர்  ஜோசப்ஜெட்சன் உத்தரவின்பேரில் எஸ்ஐகள் பெருமாள், பழனிசாமி  ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: