கோவில்பட்டி, நவ. 22: கோவில்பட்டியில் அமமுகவினர், அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அமமுகவை சேர்ந்த கோவில்பட்டி நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் ராமர் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்த விலகி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர், சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் சின்னப்பன் எம்எல்ஏ, கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.