எஸ்பிஐ மையத்தில் பயிற்சி துவக்க விழா

ஸ்பிக்நகர், நவ. 22: பாரத ஸ்டேட் வங்கியின் அபிராமிநகர் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் (RSETI) UYEGP பயிற்சி துவக்க விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் யோகானந்த், துணை மேலாளர் விஜயகுமார், மாவட்ட தொழில் மைய உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பயிற்சியை துவக்கி வைத்தனர். விழாவில் முன்னோடி வங்கி மேலாளர் யோகானந்த் பேசுகையில், வங்கிகள் எவ்வாறு செயல்படுகிறது. வங்கிக்கடன் திரும்ப செலுத்துவதின் முக்கியத்துவம். அரசு வழங்கும் மானியம் உள்ளிட்டவற்றை விளக்கினார். பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: