ஆறுமுகநேரியில் 70 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஆறுமுகநேரி, நவ.22:  ஆறுமுகநேரியில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் வேல்முருகன்(38).  இவர் ஆறுமுகநேரி மெயின்பஜாரில் பேரூந்து நிறுத்தம் அருகே மது விற்று கொண்டிருந்தார். அப்போது ரோந்து வந்த ஆறுமுகநேரி சப்இன்ஸ்பெக்டர் சரவணன், அவரை கைது செய்து அவரிடம் இருந்து 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: