×

ஏற்காட்டில் விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி

ஏற்காடு, நவ.22: ஏற்காட்டில் விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஏற்காடு, பெலாக்காடு கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில், சிறு தானிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விவசாயிகளின் பேரணி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ரமேஷ் தலைமையில், பெலாக்காடு கிராம சந்தையில் துவங்கிய பேரணி ஊர்வலமாக துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. பேரணி துவங்கும் முன்பு ராகி, சாமை, தினை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில்குமார், அய்யந்துரை மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் சதீஸ்குமார், துரை அரசு மற்றும் கேளையூர், மாரமங்கலம், அரங்கம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : Farmers awareness rally ,Yercaud ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து