×

ஆத்தூரில் மாணவ, மாணவிகளுக்கு இளம்படைப்பாளர் விருது

ஆத்தூர், நவ.22:  ஆத்தூரில் மாணவ, மாணவிகளுக்கு தேசிய நூலக வார விழாவில் இளம் படைப்பாளர் விருது வழங்கப்பட்டது. ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள சின்னசாமி அய்யா நடுநிலைப்பள்ளி மாணவன் நவநீதன், பேச்சு போட்டியிலும், கீரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பூமிகா கட்டுரை போட்டியிலும், விக்னேஸ்வரி கவிதை போட்டியிலும், ஆறகளூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிதி பேச்சு போட்டியில் 2ம் இடமும், மாணவி கீர்த்தனா 3ம் இடமும், தென்னங்குடிபாளையம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி கவிதை போட்டியில் 3ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை சேலம் ஆர்டிஓ மாறன், இளம் படைப்பாளர் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அதிகாரி சுமதி, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags : student ,Athur ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...