×

கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தின கொண்டாட்டம்

கெங்கவல்லி, நவ.22: கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. கெங்கவல்லி ஒன்றியம், கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் உலக குழந்தைகள் தினவிழா பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் செல்வம் அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்து கூறினார். ஐ.நா.சபையால் நவம்பர் 20ம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது 72 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் நலனைக் காக்கவும், குழந்தைகள் மத்தியில் சர்வதேச ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது என தலைமை ஆசிரியர் கூறினார். மீனாம்பிகா அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

Tags : International Children's Day Celebration ,Kadampur Government Elementary School ,
× RELATED கருக்குப்பேட்டை பகுதியில் சர்வதேச...