இளம்பிள்ளை, நவ.22: இளம்பிள்ளை அடுத்த காந்திநகர் செல்லும் சாலையில் (மாரியம்மன் கோயில் பின்புறம்) உள்ள பாலத்தின் நடுவே பெரிய பள்ளம் இருந்தது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள் தவிப்பிற்குள்ளாகினர். மேலும் இரவு நேரத்தில் வருபர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவியது. இந்த பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தி சம்மந்தப்பட்ட துறையினரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து படத்துடன் தினகரனில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று இடங்கணசாலை பேரூராட்சி பணியாளர்கள், சிதிலமடைந்து காணப்பட்ட பெரிய பள்ளத்தை சீரமைத்தனர்.